என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    புதை வடகம்பிகள் பொருத்தும் பணி - ஈரோடு நகரப் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

    ஈரோடு நகரப் பகுதிகளில் புதை வடகம்பிகள் பொருத்தும் பணி நடைபெற இருப்பதால் நாளை சில பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் திருநகர் காலனி மின் பாதையில் மும்முனை கம்பங்கள் அமைத்து புதைவட கம்பியை பொருத்தும் பணி நடக்கிறது.

    இதையட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

    வீ.சி.டி.வி. ரோடு (மல்லிகை அரங்கம்), திருநகர் காலனி, மாதவக்காடு, சிந்தன்நகர், கிருஷ்ணம்பாளையம், காமலாநகர், சுக்கன்நகர், ஆர்.கே.வீ.நகர், ராஜகோபால தோட்டம், ராமமூர்த்திநகர், எம்.ஜி.ஆர்.நகர், வண்டியுரான் கோவில் வீதி, மூலப்பட்டறை,
    ஈ.வி.கே.சம்பத்சாலை, கே.என்.கே. ரோடு, ராஜாஜிபுரம், மில்வீதி, காந்திபுரம் 1, 2, 3 வீதிகள், கண்ணையன் வீதி, சுப்பையன் வீதி, மரப்பாலம் ரோடு, குயிலான் தோப்பு, கருங்கல்பாளையம், மேட்டூர் ரோடு (பஸ் நிலையம் பகுதிகள்), திருவள்ளுவர் குடில், மற்றும் காவேரிரோடு ஆகிய பகுதிகள்.

    இத்தகவலை ஈரோடு மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்து உள்ளார்.
    Next Story
    ×