என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
படப்பை அருகே தந்தை கண்டித்ததால் தூக்குபோட்டு வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்21 Dec 2019 6:41 AM GMT (Updated: 21 Dec 2019 6:41 AM GMT)
படப்பை அருகே தந்தை கண்டித்ததால் தூக்குபோட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
படப்பை:
படப்பையை அடுத்த சோமங்கலம் மேட்டூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் குசேலன். இவரது மகன் திருமூர்த்தி (வயது 22). இவர் உயர்ரக செல்போன்களை திருடி விற்று உல்லாசமாக வாழ்ந்து வந்தார்.
ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் சில நாட்களுக்கு முன்பு செல்போன் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்று வந்தார். திருமூர்த்தி வேலைக்கு எங்கும் செல்லாமல் குடித்து விட்டு ஊதாரி தனமாக ஊர் சுற்றி வந்தார். இதனால் அவரது தந்தை, திருமூர்த்தியை கண்டித்துள்ளார்.
இதில் மனம் உடைந்த திருமூர்த்தி வீட்டில் யாரும் இல்லாதபோது மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுந்தர்ராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X