என் மலர்
செய்திகள்

கோப்பு படம்
ஈரோடு மாவட்டத்தில் 8 ஊராட்சி மன்ற தலைவர்கள் போட்டியின்றி தேர்வு
ஈரோடு மாவட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு 8 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு கவுன்சிலர் பதவிகள் 19, ஒன்றிய குழு கவுன்சிலர் பதவிகள் 183, ஊராட்சி மன்ற தலைவர் பதவிகள் 225, ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிகள் 2097 என 2524 பதவிகளுக்கு இரண்டு கட்டங்களாக வரும் 27, 30-ந் தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ம் தேதி முதல் தொடங்கி 16-ந் தேதி வரை நடந்தது.
ஈரோடு மாவட்டம் முழுவதும் இதுவரை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக 8277 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திதிருந்தனர். இதில் 127 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பலர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர்.
இதனை தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் 225 ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்காக வேட்பு மனுக்களைத்தாக்கல் செய்து இருந்தனர்.
இந்நிலையில் ஈரோடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கதிரம்பட்டி, பிச்சாண்டாம்பாளையம் ஆகிய இரு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியின்றி 2 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதைப்போல் மொடக்குறிச்சி உட்பட்ட கஸ்பாபேட்டை, கொடுமுடிக்கு உட்பட்ட வள்ளிபுரம், பெருந்துறைக்கு உட்பட்ட செல்லப்பம்பாளையம், அம்மாபேட்டைக்கு உட்பட்ட புதூர், அந்தியூர் பகுதிக்கு உட்பட்ட பச்சாம்பாளையம், சென்னிமலை பகுதிக்கு உட்பட்ட கொடுமணல் ஆகிய பகுதிகளிலும் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு கவுன்சிலர் பதவிகள் 19, ஒன்றிய குழு கவுன்சிலர் பதவிகள் 183, ஊராட்சி மன்ற தலைவர் பதவிகள் 225, ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிகள் 2097 என 2524 பதவிகளுக்கு இரண்டு கட்டங்களாக வரும் 27, 30-ந் தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ம் தேதி முதல் தொடங்கி 16-ந் தேதி வரை நடந்தது.
ஈரோடு மாவட்டம் முழுவதும் இதுவரை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக 8277 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திதிருந்தனர். இதில் 127 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பலர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர்.
இதனை தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் 225 ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்காக வேட்பு மனுக்களைத்தாக்கல் செய்து இருந்தனர்.
இந்நிலையில் ஈரோடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கதிரம்பட்டி, பிச்சாண்டாம்பாளையம் ஆகிய இரு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியின்றி 2 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதைப்போல் மொடக்குறிச்சி உட்பட்ட கஸ்பாபேட்டை, கொடுமுடிக்கு உட்பட்ட வள்ளிபுரம், பெருந்துறைக்கு உட்பட்ட செல்லப்பம்பாளையம், அம்மாபேட்டைக்கு உட்பட்ட புதூர், அந்தியூர் பகுதிக்கு உட்பட்ட பச்சாம்பாளையம், சென்னிமலை பகுதிக்கு உட்பட்ட கொடுமணல் ஆகிய பகுதிகளிலும் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
Next Story






