என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இரும்பு பட்டறை தொழிலாளி சுவர் இடிந்து விழுந்து பலி
Byமாலை மலர்19 Dec 2019 10:32 AM GMT (Updated: 19 Dec 2019 10:32 AM GMT)
கடலூர் அருகே இரும்பு பட்டறை தொழிலாளி சுவர் இடிந்து விழுந்து பலியானார்.
கடலூர்:
கடலூர் உண்ணாமலை செட்டிசாவடியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 38). இரும்பு பட்டறை நடத்தி வந்தார்.
இவர் நேற்று இரவு வீட்டின் அருகில் உள்ள கூரை வீட்டின் சுவரை இடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த சுவர் இடிந்து சீனிவாசன் மீது விழுந்தது. இதில் காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு சீனிவாசனின் மனைவி கயல்விழி அங்கு ஓடி வந்தார். தனது கணவர் மயங்கி கிடந்ததை பார்த்து கூச்சல் போட்டார். உடனே அக்கம் பக்கம் உள்ளவர்கள் அங்கு வந்தனர். மயங்கி கிடந்த சீனிவாசனை கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சீனிவாசனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வீட்டை இடித்த போது சிலாப் விழுந்து வெட்டியதில் சீனிவாசன் இறந்து இருப்பது தெரியவந்தது.
கடலூர் உண்ணாமலை செட்டிசாவடியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 38). இரும்பு பட்டறை நடத்தி வந்தார்.
இவர் நேற்று இரவு வீட்டின் அருகில் உள்ள கூரை வீட்டின் சுவரை இடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த சுவர் இடிந்து சீனிவாசன் மீது விழுந்தது. இதில் காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு சீனிவாசனின் மனைவி கயல்விழி அங்கு ஓடி வந்தார். தனது கணவர் மயங்கி கிடந்ததை பார்த்து கூச்சல் போட்டார். உடனே அக்கம் பக்கம் உள்ளவர்கள் அங்கு வந்தனர். மயங்கி கிடந்த சீனிவாசனை கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சீனிவாசனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வீட்டை இடித்த போது சிலாப் விழுந்து வெட்டியதில் சீனிவாசன் இறந்து இருப்பது தெரியவந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X