search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயிரிழப்பு
    X
    உயிரிழப்பு

    இரும்பு பட்டறை தொழிலாளி சுவர் இடிந்து விழுந்து பலி

    கடலூர் அருகே இரும்பு பட்டறை தொழிலாளி சுவர் இடிந்து விழுந்து பலியானார்.
    கடலூர்:

    கடலூர் உண்ணாமலை செட்டிசாவடியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 38). இரும்பு பட்டறை நடத்தி வந்தார்.

    இவர் நேற்று இரவு வீட்டின் அருகில் உள்ள கூரை வீட்டின் சுவரை இடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த சுவர் இடிந்து சீனிவாசன் மீது விழுந்தது. இதில் காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு சீனிவாசனின் மனைவி கயல்விழி அங்கு ஓடி வந்தார். தனது கணவர் மயங்கி கிடந்ததை பார்த்து கூச்சல் போட்டார். உடனே அக்கம் பக்கம் உள்ளவர்கள் அங்கு வந்தனர். மயங்கி கிடந்த சீனிவாசனை கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சீனிவாசனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வீட்டை இடித்த போது சிலாப் விழுந்து வெட்டியதில் சீனிவாசன் இறந்து இருப்பது தெரியவந்தது.

    Next Story
    ×