search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    அந்தியூர் அருகே கூலி தொழிலாளி தற்கொலை

    அந்தியூர் அருகே கூலி தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள ஜே.ஜே. நகர் பகுதியைச் சேர்ந்த சித்தையன் (45) கூலித் தொழிலாளி. இவர் கடந்த 6 மாதமாக குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் சண்டை ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் நேற்று இரவு ஜே.ஜே. நகரில் உள்ள தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனையடுத்து அந்தியூர் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்த சித்தையனை அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் மனைவி மீனாட்சி ஆகியோர் உள்ளனர். இதுகுறித்து அந்தியூர் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×