search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்- விவசாயி பலி

    வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தேத்தாகுடி வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மகன் சண்முகசுந்தரம் (40). விவசாயி. இவர் கடந்த 11-ந் தேதி அங்குள்ள கடையில் பொருட்களை வாங்கி கொண்டு மோட்டார் சைக்கிளில் மெயின் ரோட்டில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

    அப்போது வேதாரண்யத்திலிருந்து கோவில்பத்து பகுதியைச் சேர்ந்த சுரேந்திரன் (27) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இந்த இரு மோட்டார் சைக்கிள்களும் வேதாரண்யம் மெயின்ரோட்டில் தேத்தாகுடி அருகே நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

    இதில் படுகாயமடைந்த சண்முகசுந்தரத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சண்முகசுந்தரம் பரிதாபமாக இறந்தார்.

    Next Story
    ×