என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேப்பூரில் ஓட்டல் அதிபர் மனைவி மின்வேலியில் சிக்கி பலி
Byமாலை மலர்13 Dec 2019 11:25 AM GMT (Updated: 13 Dec 2019 11:25 AM GMT)
கடலூர் மாவட்டம் வேப்பூரில் ஓட்டல் அதிபர் மனைவி மின்வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேப்பூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் பஸ் நிலையம் அருகே ஓட்டல் நடத்தி வருபவர் நாகலிங்கம் (வயது 46). இவரது மனைவி கலைச்செல்வி (38).
இவர்களுக்கு 2 மகன் 1 மகள் உள்ளனர். இன்று காலை கலைச்செல்வி பஸ் நிலையம் அருகே உள்ள வயல்வெளிக்கு புல் அறுக்க சென்றார். அப்போது அங்கு மக்காசோளம் பயிரிடப்பட்டிருந்த வயலில் உள்ளே நுழைந்தார்.
அங்கு காட்டு பன்றிகள் வயலுக்குள் புகாமல் இருக்க சுற்றி மின்வேலி அமைக்கப்பட்டிருந்தது. இதனை அறியாமல் கலைச்செல்வி வயலுக்குள் இறங்கினார்.
அப்போது அவர் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். சிறிது நேரத்தில் பரிதாபமாக கலைசெல்வி இறந்து விட்டார். அந்த வழியாக சென்றவர்கள் கலைச்செல்வி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அவர்கள் வேப்பூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று உடல் கருகி பிணமாக கிடந்த கலைச்செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வயலில் மின்வேலி அமைத்து யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் பஸ் நிலையம் அருகே ஓட்டல் நடத்தி வருபவர் நாகலிங்கம் (வயது 46). இவரது மனைவி கலைச்செல்வி (38).
இவர்களுக்கு 2 மகன் 1 மகள் உள்ளனர். இன்று காலை கலைச்செல்வி பஸ் நிலையம் அருகே உள்ள வயல்வெளிக்கு புல் அறுக்க சென்றார். அப்போது அங்கு மக்காசோளம் பயிரிடப்பட்டிருந்த வயலில் உள்ளே நுழைந்தார்.
அங்கு காட்டு பன்றிகள் வயலுக்குள் புகாமல் இருக்க சுற்றி மின்வேலி அமைக்கப்பட்டிருந்தது. இதனை அறியாமல் கலைச்செல்வி வயலுக்குள் இறங்கினார்.
அப்போது அவர் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். சிறிது நேரத்தில் பரிதாபமாக கலைசெல்வி இறந்து விட்டார். அந்த வழியாக சென்றவர்கள் கலைச்செல்வி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அவர்கள் வேப்பூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று உடல் கருகி பிணமாக கிடந்த கலைச்செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வயலில் மின்வேலி அமைத்து யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X