என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெங்காயத்தை பதுக்கினால் கைது நடவடிக்கை - அதிகாரிகள் எச்சரிக்கை
Byமாலை மலர்10 Dec 2019 9:48 AM GMT (Updated: 10 Dec 2019 9:48 AM GMT)
பவானி-அந்தியூர் குடோன்களில் சோதனையிட்ட அதிகாரிகள் வெங்காயத்தை பதுக்கினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபி, சத்தி, பவானி, பெருந்துறை உள்பட மாவட்டம் முழுவதும் வெங்காயத்தின் விலை ஏறு முகமாக உள்ளது.
ஈரோட்டில் இன்று சின்ன வெங்காயம் கிலோ ரூ.110 முதல் 130 வரைக்கும், இதே போல் பெரிய வெங்காயம் கிலோ ரூ.130 முதல் 140 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெங்காயத்தின் விலை தொடர்ந்த ஏறுமுகமாகவே இருப்பதால் பெண்கள் வெங்காயம் வாங்குவதை தற்போது அதிகமாக தவிர்க்க தொடங்கி விட்டனர்.
இந்த நிலையில் ஈரோடு உள்பட மாவட்டம் முழுவதும் ஒரு சில வியாபாரிகள் வெங்காயத்தை பதுக்கி வைத்து உள்ளார்களா? என அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும் அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு வெங்காயத்தை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேவைப்பட்டால் கைது நடவடிக்கையும் எடுக்கப்படும் என அதிகாரிகள் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் அதிகாரிகள் கூறும் போது, ‘‘ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர், பவானி பகுதிகளில் கடைகள் மற்றும் சில குடோன்களில் சோதனை நடத்தினோம். அரசு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அதிகமாக அங்கு வெங்காயம் இல்லை. குறிப்பிட்ட அளவுக்கு மேல் வெங்காயத்தை பதுக்கி இருந்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று கூறினர்.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபி, சத்தி, பவானி, பெருந்துறை உள்பட மாவட்டம் முழுவதும் வெங்காயத்தின் விலை ஏறு முகமாக உள்ளது.
ஈரோட்டில் இன்று சின்ன வெங்காயம் கிலோ ரூ.110 முதல் 130 வரைக்கும், இதே போல் பெரிய வெங்காயம் கிலோ ரூ.130 முதல் 140 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெங்காயத்தின் விலை தொடர்ந்த ஏறுமுகமாகவே இருப்பதால் பெண்கள் வெங்காயம் வாங்குவதை தற்போது அதிகமாக தவிர்க்க தொடங்கி விட்டனர்.
இந்த நிலையில் ஈரோடு உள்பட மாவட்டம் முழுவதும் ஒரு சில வியாபாரிகள் வெங்காயத்தை பதுக்கி வைத்து உள்ளார்களா? என அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும் அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு வெங்காயத்தை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேவைப்பட்டால் கைது நடவடிக்கையும் எடுக்கப்படும் என அதிகாரிகள் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் அதிகாரிகள் கூறும் போது, ‘‘ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர், பவானி பகுதிகளில் கடைகள் மற்றும் சில குடோன்களில் சோதனை நடத்தினோம். அரசு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அதிகமாக அங்கு வெங்காயம் இல்லை. குறிப்பிட்ட அளவுக்கு மேல் வெங்காயத்தை பதுக்கி இருந்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று கூறினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X