என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சத்தியமங்கலம் அருகே அடர்ந்த காட்டில் விலங்குகளை வேட்டையாட வந்த 3 பேர் கைது
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனகோட்டம் கேர்மாளம் வனச்சரகம் மேற்கு வனப்பகுதி இது இரு மாநில எல்லையில் அமைந்துள்ளது.
இப்பகுதியில் வனத்துறையினர் அடர்ந்து காட்டுப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது வனபகுதியில் விலங்குகளை வேட்டையாடுவதற்கு பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து மேற்கு பகுதியில் சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் கேர்மாளம் அருகே உள்ள கானக்கரையை சேர்ந்த ஜடையன்(53), மாதேஸ்(32) மற்றும் கோத்தகிரியைச் சேர்ந்த முருகேஷ்(40) என்பது தெரியவந்தது. அவர்கள் வேட்டையாடுவதற்கு பயன்படுத்திய சுருக்கு கம்பி, அரிவாள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து அனுமதியின்றி காட்டில் சுற்றித்திரிந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஆசனூர் புலிகள் காப்பகத்தின் இணை இயக்குநர் குமளி வெங்கட் அப்பலா நாயுடு முன் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த அவர், வனத்தில் அத்துமீறி நுழைந்து விலங்குகளை வேட்டையாட முயன்றதாக மூவருக்கும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்