என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஈரோட்டில் வீட்டை விட்டு வெளியே சென்ற முதியவர் மாயம்
ஈரோடு:
ஈரோடு மூல்பட்டறை 3-வது வீதியை சேர்ந்தவர் நடராஜன் என்ற தமிழ் குமரன் (வயது 85). இவர் கடந்த 3 ஆண்டுக்கு முன் நடந்த சாலை விபத்தில் அதிர்ஷ்டவசமாக தப்பினார்.
இந்த நிலையில் அவர் வீட்டை விட்டு காலை செல்பவர் இரவு 10 மணிக்கெல்லாம் வந்து விடுவார்.
இதே போல் கடந்த 6-ந் தேதி காலை 10 மணிக்கு டீ குடிக்க கடைக்கு சென்ற தமிழ் குமரன் இதுவரை வீட்டுக்கு வரவில்லையாம்.
அக்கம் பக்கம் மற்றும் உறவினர்களிடம் விசாரித்தும் அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என தெரியவில்லை.
இது குறித்து அவரது மகன் கோபால கிருஷ்ணன் ஈரோடு கருங்கல் பாளையம் போலீசில் புகார் செய்தார்.
மாயமான முதியவர் கருப்பு கலர் கட்டம் போட்ட சட்டையும், நீல நிற கட்டம் போட்ட லுங்கியும் அணிந்திருந்தார். அவரது நெற்றியில் ஒரு காய தழும்பும் உள்ளது.
இது குறித்து கருங்கல் பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜான் கென்னடி விசாரணை நடத்தி மாயமான முதியவரை தேடி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்