என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    குன்னூர்- கோத்தகிரியில் 3-வது நாளாக மழை: குளிரால் பொதுமக்கள் பாதிப்பு

    குன்னூர் மற்றும் கோத்தகிரியில் 3-வது நாளக மழை பெய்து வருவதால் பொதுமக்கள் குளிரால் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
    குன்னூர்:

    குன்னூரில் 3-வது நாளாக மழை பெய்தது.

    நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த 20 நாட்களுக்கு முன் பலத்த மழை பெய்தது.

    இதனால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டும், மரங்கள் சாலையில் முறிந்து விழுந்தும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில வீடுகளும் இடிந்து விழுந்தது.

    கடந்த 4 நாட்களாக மழை குறைந்து காணப்பட்டது. இதனால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது.

    இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் பலத்த மழை பெய்தது. நேற்றும் இரவும் மழை பெய்தது. குன்னூரில் இரவு 10.30 மணி முதல் 2 மணி வரை மழை நீடித்தது.

    இதேபோல் கோத்தகிரியிலும் நேற்று இரவு லேசான மழை பெய்தது. குன்னூர், கோத்தகிரியில் கடந்த 3 நாட்களாக இரவில் மழை பெய்து வருகிறது. இதனால் கடும் குளிர் நிலவி வருகிறது. பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். தேயிலை பறிக்க செல்லும் தொழிலாளர்கள் பிளாஸ்டிக் போர்வைகளை அணிந்த படி சென்று வருகிறார்கள். குன்னூரில் இரவு மழை பெய்தாலும் பகலில் மழை இல்லை. வானம் மேக மூட்டத்ததுடன் காணப்படுகிறது.
    Next Story
    ×