என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குன்னூர்- கோத்தகிரியில் 3-வது நாளாக மழை: குளிரால் பொதுமக்கள் பாதிப்பு
Byமாலை மலர்9 Dec 2019 11:26 AM GMT (Updated: 9 Dec 2019 11:26 AM GMT)
குன்னூர் மற்றும் கோத்தகிரியில் 3-வது நாளக மழை பெய்து வருவதால் பொதுமக்கள் குளிரால் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
குன்னூர்:
குன்னூரில் 3-வது நாளாக மழை பெய்தது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த 20 நாட்களுக்கு முன் பலத்த மழை பெய்தது.
இதனால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டும், மரங்கள் சாலையில் முறிந்து விழுந்தும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில வீடுகளும் இடிந்து விழுந்தது.
கடந்த 4 நாட்களாக மழை குறைந்து காணப்பட்டது. இதனால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் பலத்த மழை பெய்தது. நேற்றும் இரவும் மழை பெய்தது. குன்னூரில் இரவு 10.30 மணி முதல் 2 மணி வரை மழை நீடித்தது.
இதேபோல் கோத்தகிரியிலும் நேற்று இரவு லேசான மழை பெய்தது. குன்னூர், கோத்தகிரியில் கடந்த 3 நாட்களாக இரவில் மழை பெய்து வருகிறது. இதனால் கடும் குளிர் நிலவி வருகிறது. பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். தேயிலை பறிக்க செல்லும் தொழிலாளர்கள் பிளாஸ்டிக் போர்வைகளை அணிந்த படி சென்று வருகிறார்கள். குன்னூரில் இரவு மழை பெய்தாலும் பகலில் மழை இல்லை. வானம் மேக மூட்டத்ததுடன் காணப்படுகிறது.
குன்னூரில் 3-வது நாளாக மழை பெய்தது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த 20 நாட்களுக்கு முன் பலத்த மழை பெய்தது.
இதனால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டும், மரங்கள் சாலையில் முறிந்து விழுந்தும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில வீடுகளும் இடிந்து விழுந்தது.
கடந்த 4 நாட்களாக மழை குறைந்து காணப்பட்டது. இதனால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் பலத்த மழை பெய்தது. நேற்றும் இரவும் மழை பெய்தது. குன்னூரில் இரவு 10.30 மணி முதல் 2 மணி வரை மழை நீடித்தது.
இதேபோல் கோத்தகிரியிலும் நேற்று இரவு லேசான மழை பெய்தது. குன்னூர், கோத்தகிரியில் கடந்த 3 நாட்களாக இரவில் மழை பெய்து வருகிறது. இதனால் கடும் குளிர் நிலவி வருகிறது. பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். தேயிலை பறிக்க செல்லும் தொழிலாளர்கள் பிளாஸ்டிக் போர்வைகளை அணிந்த படி சென்று வருகிறார்கள். குன்னூரில் இரவு மழை பெய்தாலும் பகலில் மழை இல்லை. வானம் மேக மூட்டத்ததுடன் காணப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X