search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் நிறுத்தம்
    X
    மின்சாரம் நிறுத்தம்

    ஈரோடு பகுதியில் நாளை மின் நிறுத்தம்

    ஈரோடு பகுதியில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    ஈரோடு:

    ஈரோடு 110-22 கி.வோ துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் 22 கி.வோ திருநகர் காலனி மின் பாதையில் புதிதாக கம்பங்கள் அமைக்கும் பணி நடக்கிறது.

    இதையொட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. ஈரோடு வி.சி.டி.வி. ரோடு (மல்லிகை அரங்கம் ரோடு), திருநகர் காலனி, மாதவக்காடு, சிந்தன் நகர், கிருஷ்ணம் பாளையம், கமலா நகர், கக்கன் நகர், ஆர்.கே.வி. நகர், ராஜகோபால் தோட்டம், ராமமூர்த்தி நகர், எம்.ஜி.ஆர். நகர், வண்டியூரான் கோவில்.

    இந்த தகவலை ஈரோடு நகரியம் மின் வாரிய செயற்பொறியாளர் பழனிவேல் தெரிவித்தார்.

    Next Story
    ×