search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலை மறியல்
    X
    சாலை மறியல்

    செங்கம் அருகே அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் மறியல்

    செங்கம் அருகே அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

    செங்கம்:

    செங்கம் அருகே உள்ள மேல்புழுதியூர் கிராமத்தில் சீரான குடிநீர் கிடைப்பதில்லை. கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இதுபற்றி உள்ளாட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். ஆனாலும் வசதிகள் செய்யப்படவில்லை. இதையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை திருவண்ணாமலை- பெங்களூர் சாலையில் மறியல் செய்தனர்.

    செங்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டனர். இந்த போராட்டத்தால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×