search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாயம்
    X
    மாயம்

    ஆண்டிப்பட்டி அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

    ஆண்டிப்பட்டி அருகே 2 குழந்தைகளுடன் மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே உள்ள சிக்கையகவுண்டன் பட்டியைச் சேர்ந்த பவுன் மகள் அனிதா (வயது 28). இவருக்கும் அரவிந்தன் என்பவருக்கும் 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு யாகவ் (வயது 8), யாழினி (4) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.

    அரவிந்தன் தனது குடும்பத்துடன் திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அனிதா தனது குழந்தைகளுடன் தந்தை வீட்டுக்கு வந்துள்ளார்.

    அதன் பிறகு திருப்பூருக்கு செல்வதாக தனது தந்தையிடம் கூறிச் சென்றார். ஆனால் அவர் திருப்பூருக்கு செல்ல வில்லை என அவரது மருமகன் அரவிந்தன் தெரிவித்தார். பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனையடுத்து அவரது தந்தை பவுன் ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×