என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விருத்தாசலம் அருகே பொதுமக்களை பயமுறுத்திய முதலை பிடிபட்டது
Byமாலை மலர்3 Dec 2019 11:55 AM GMT (Updated: 3 Dec 2019 11:55 AM GMT)
விருத்தாசலம் அருகே ஏரியில் குளிக்க சென்றவர்களை பயமுறுத்திய முதலையை லாவகமாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
விருத்தாசலம்:
விருத்தாசலம் அருகே கம்மாபுரம் அடுத்த கோபாலபுரம் கிராமத்தில் உள்ள வண்ணாத்து ஏரியில் தண்ணீர் நிரம்பியுள்ளது. இந்நிலையில் ஏரியில் குளிக்கச் சென்றவர்கள் முதலையை பார்த்ததாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின்பேரில் விருத்தாச்சலம் வனத் துறை ஊழியர்கள் விரைந்து சென்று ஏரியில் முதலை உள்ளதா? என கண்காணித்தனர். ஆனால் முதலை எதுவும் தென் படவில்லை. வருவாய்த்துறை மூலம் பொதுமக்களுக்கு ஏரியில் முதலை இருப்பதாகவும் எச்சரிக்கையாக இருக்கும்படியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிலையில் நேற்றிரவு அப்பகுதிக்கு சென்ற இளைஞர்கள் ஏரிக் கரையிலிருந்து நெல்வயல் பகுதிக்கு ஊர்ந்து சென்ற முதலையை கண்டதும் அதிர்ச்சி அடைந்தனர்.
இளைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முதலையை லாவகமாக பிடித்து கயிறால் கட்டி விருத்தாசலம் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X