search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுற்றுச்சுவர் விழுந்த இடத்தில் நடைபெற்ற மீட்பு பணி.
    X
    சுற்றுச்சுவர் விழுந்த இடத்தில் நடைபெற்ற மீட்பு பணி.

    மேட்டுப்பாளையம் விபத்தில் பெண் பலி - விருந்துக்கு சென்ற இடத்தில் உயிரிழந்த பரிதாபம்

    மேட்டுப்பாளையத்தில் விருந்துக்கு சென்ற பெண் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    பு.புளியம்பட்டி:

    மேட்டுப்பாளையம் நடூர் ஏ.டி. காலனியில் வீடு இடிந்து 17 பேர் பலியானார்கள். இதில் விருந்தினராக வந்த ருக்மணியும் ஒருவர். இவர் ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் இருந்து நேற்று முன்தினம் நடூர் வந்தார். இவர் பலியான ஆனந்த குமார் குழந்தைகள் லோகுராம், அட்சயா ஆகியோருடன் விளையாடினார். மேலும் அருகில் உள்ள உறவினர்களின் வீடுகளுக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் மாலை சொந்த ஊருக்கு கிளம்புவதாக இருந்தது.

    ஆனால் அப்போது மழை பெய்ததால் ஆனந்த குமார் வீட்டில் தங்கி விட்டு நேற்று காலை ஊருக்கு கிளம்ப திட்டமிட்டு இருந்தார். ஆனால் நேற்று அதிகாலை சுவர் இடிந்த விபத்தில் அவர் உயிர் இழந்து விட்டார்.

    விருந்தாளியாக வந்த ருக்மணி உயிரிழந்தது அவரது குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஆனந்த குமாரின் வீட்டுக்கு அருகில் வசித்து வந்தவர் திலகவதி. இவர் ஆனந்த குமாரின் மனைவி நதியாவுடன் உள்ள நட்பால் அடிக்கடி வீட்டிற்கு வருவார். நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையால் அவரது வீட்டு கூரை ஒழுகியது. இதனை தொடர்ந்து அவர் நதியாவின் வீட்டில் இரவு தூங்குவதற்காக வந்தார்.

    ருக்மணியுடன் பேசி விட்டு இரவு தூங்க சென்றவர் அதிகாலையில் சுவர் இடிந்த விபத்தில் உயிரிழந்தார். இவரது கணவர் பெயர் பழனிசாமி 2 மகன்கள் உள்ளனர்.

    இதே போல் உயிரிழந்த சிவகாமியின் வீட்டில் பக்கத்து வீட்டு பெண் மங்கம்மாள் என்பவரும் தங்கினார். அவரும் பலியாகி விட்டார்.
    Next Story
    ×