search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நளினி-முருகன்
    X
    நளினி-முருகன்

    வேலூர் ஜெயிலில் நளினி-முருகன் உண்ணாவிரதம் நீடிப்பு

    விடுதலை செய்யக்கோரி வேலூர் ஜெயிலில் நளினியும், முருகனும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு குளுக்கோஸ் ஏற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

    பல ஆண்டுகளாக ஜெயில் தண்டனை அனுபவித்து வரும் தங்களை விடுதலை செய்ய வேண்டும் அல்லது கருணைக் கொலை செய்ய வேண்டும் என்று நளினி பிரதமருக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்.

    அதில் தன்னையும் தனது கணவரையும் சென்னை புழல் ஜெயிலுக்கு மாற்ற சிறை அதிகாரிகள் மறுக்கிறார்கள். சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டும் கூட ஜெயில் அதிகாரிகள் அதை கடைப்பிடிக்கவில்லை. தங்களை கர்நாடக ஜெயிலுக்கோ அல்லது வேறு மாநிலத்துக்கோ மாற்ற வேண்டும் என்று நளினி தெரிவித்துள்ளார்.

    இந்த கோரிக்கையை வலியுறுத்தி நளினி கடந்த 28-ந்தேதி உண்ணாவிரதத்தை தொடங்கினார். தொடர்ந்து இன்று 6-வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.

    கருணைக் கொலை செய்யக் கோரி முருகனும் ஜெயிலில் 4-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அதிகாரிகள் கேட்டுக் கொண்டும் அவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்துவிட்டனர்.

    நளினியின் உடல் நிலையை மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.

    அவர்களுக்கு குளுக்கோஸ் ஏற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    Next Story
    ×