search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தனியரசு எம்எல்ஏ
    X
    தனியரசு எம்எல்ஏ

    உள்ளாட்சி தேர்தலை ஒத்திவைப்பது நல்லது- தனியரசு எம்.எல்.ஏ.

    உள்ளாட்சி தேர்தலை ஒத்திவைப்பது நல்லது என்று தனியரசு எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
    ஈரோடு:

    ஈரோட்டில் தனியரசு எம்.எல்.ஏ. இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் பலமுறை நடத்த ஏற்பாடு செய்தும் நடைபெறவில்லை தற்போதும் கூட இது சம்பந்தமாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.

    அந்த வழக்கின் தீர்ப்பு வரும் வரை உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் உள்ளது. அனைத்து கட்சியினர் கலந்தாலோசித்து உள்ளாட்சித் தேர்தலை வரும் 2021-ம் ஆண்டு வரை ஒத்தி வைப்பது நல்லது என்று நினைக்கிறேன் .

    ரஜினி கமலால் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது இருவரும் 70 ஆண்டுகள் எந்த ஒரு கட்சியிலும் அடிப்படை உறுப்பினராக கூட சேராமல் எந்த ஒரு போராட்டத்திலும் பங்கேற்காமல் திடீரென அரசியல் அரியணையில் ஏற நினைப்பது தவறு. அவர்கள் மற்ற கட்சிகளுடன் இணைந்து செயல்படலாம் தமிழக மக்கள் இனி நடிகர் நடிகைகளை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.  அவர்களுக்கு ஒரு ஓட்டு கூட விழாது.

     இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×