என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈரோட்டில் மோட்டார்சைக்கிள் திருடிய 3 வாலிபர்கள் கைது
Byமாலை மலர்26 Nov 2019 11:40 AM GMT (Updated: 26 Nov 2019 11:40 AM GMT)
ஈரோட்டில் மோட்டார்சைக்கிள் திருடியது தொடர்பாக 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மாதாபுரம் பகுதியை சேர்ந்த முருகேசன்(55). இவர் சம்பவத்தன்று இரவு ஈரோடு காவேரி ரோட்டில் உள்ள கடையில் மீன் சாப்பிடுவதற்காக, தனது மோட்டார் சைக்கிளை ரோட்டோரம் நிறுத்தி விட்டு சென்றார்.
பின்னர் மீண்டும் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் காணவில்லை. அக்கம்பக்கம் தேடிப்பார்த்தும் கிடைக்காததால், மர்மநபர்கள் திருடி சென்றதை உணர்ந்து, ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின்பேரில் போலீசார் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், வாகன எண்ணை சோதனை செய்த போது, அது முருகேசனின் பைக் என்பது தெரியவந்தது. இதையடுத்து பைக்கை பறிமுதல் செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த சையது இப்ராகிம்(28), ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியை கார்த்தி(25) ஆகிய 2பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதேபோல், ஈரோடு முனிசிபல்காலனி மாணிக்கம் தெருவை சேர்ந்த குருநாதன்(36) என்பவர் கடந்த 23-ந் தேதி வ.உ.சி. பார்க் அருகில் உள்ள ஓட்டல் முன்பு நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் மீண்டும் வந்து பார்த்தபோது அவரது பைக்கை காணவில்லை. இந்நிலையில், ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியில் குருநாதன் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த ஒரு நபர், குருநாதனின் பைக்கினை ஓட்டி வந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து, அந்த மர்மநபரை மடக்கி பிடித்து ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில், அந்த நபர், ஈரோடு ஆர்.என். புதூரை சேர்ந்த கிருஷ்ணன்(40) என்பது தெரியவந்தது. இதையடுத்து கிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மாதாபுரம் பகுதியை சேர்ந்த முருகேசன்(55). இவர் சம்பவத்தன்று இரவு ஈரோடு காவேரி ரோட்டில் உள்ள கடையில் மீன் சாப்பிடுவதற்காக, தனது மோட்டார் சைக்கிளை ரோட்டோரம் நிறுத்தி விட்டு சென்றார்.
பின்னர் மீண்டும் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் காணவில்லை. அக்கம்பக்கம் தேடிப்பார்த்தும் கிடைக்காததால், மர்மநபர்கள் திருடி சென்றதை உணர்ந்து, ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின்பேரில் போலீசார் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், வாகன எண்ணை சோதனை செய்த போது, அது முருகேசனின் பைக் என்பது தெரியவந்தது. இதையடுத்து பைக்கை பறிமுதல் செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த சையது இப்ராகிம்(28), ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியை கார்த்தி(25) ஆகிய 2பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதேபோல், ஈரோடு முனிசிபல்காலனி மாணிக்கம் தெருவை சேர்ந்த குருநாதன்(36) என்பவர் கடந்த 23-ந் தேதி வ.உ.சி. பார்க் அருகில் உள்ள ஓட்டல் முன்பு நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் மீண்டும் வந்து பார்த்தபோது அவரது பைக்கை காணவில்லை. இந்நிலையில், ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியில் குருநாதன் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த ஒரு நபர், குருநாதனின் பைக்கினை ஓட்டி வந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து, அந்த மர்மநபரை மடக்கி பிடித்து ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில், அந்த நபர், ஈரோடு ஆர்.என். புதூரை சேர்ந்த கிருஷ்ணன்(40) என்பது தெரியவந்தது. இதையடுத்து கிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X