என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மயிலாடுதுறையில் 20 மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம் மயிலாடுதுறை கோட்டத்தில் குறிப்பாக மயிலாடுதுறை, சீர்காழி, செம்பனார்கோயில், பொறையார் பகுதிகளில் அடிக்கடி மோட்டார் சைக்கிள்கள் திருட்டுப் போயின.
இந்நிலையில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் மயிலாடுதுறை உதவி கண்காணிப்பாளர் அண்ணா துரை பரிந்துரையின் பேரில் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது.
இதில் சப்-இன்ஸ்பெக்டர் இளையாராஜா, ஏட்டு நரசிம்மபாரதி, செந்தில், அசோக், சிகாமணி உள்ளிட்ட குழுவினர் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டனர். இந்நிலையில் வாகன சோதனையின் போது அவ்வழியே வந்த ஒருவரை நிறுத்தி சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். இதில் அவர் சீர்காழி தாலுகா மெய்யன்தெரு பெருந்தோட்டத்தை சேர்ந்த சாமிதுரை மகன் சுந்தர் (23) என தெரிய வந்தது.
இவர் மீது சீர்காழி, மயிலாடுதுறை, செம்பனார் கோயில், பொறையார், காரைக்கால் உள்ளிட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் திருட்டு வழக்கு உள்ளதென தெரியவந்தது. இதையடுத்து சுந்தர் திருடி பதுக்கி வைத்திருந்த 20 பைக்கை பறிமுதல் செய்து சுந்தரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்