search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மயிலாடுதுறையில் 20 மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது

    மயிலாடுதுறையில் 20 மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை கோட்டத்தில் குறிப்பாக மயிலாடுதுறை, சீர்காழி, செம்பனார்கோயில், பொறையார் பகுதிகளில் அடிக்கடி மோட்டார் சைக்கிள்கள் திருட்டுப் போயின.

    இந்நிலையில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் மயிலாடுதுறை உதவி கண்காணிப்பாளர் அண்ணா துரை பரிந்துரையின் பேரில் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது.

    இதில் சப்-இன்ஸ்பெக்டர் இளையாராஜா, ஏட்டு நரசிம்மபாரதி, செந்தில், அசோக், சிகாமணி உள்ளிட்ட குழுவினர் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டனர். இந்நிலையில் வாகன சோதனையின் போது அவ்வழியே வந்த ஒருவரை நிறுத்தி சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். இதில் அவர் சீர்காழி தாலுகா மெய்யன்தெரு பெருந்தோட்டத்தை சேர்ந்த சாமிதுரை மகன் சுந்தர் (23) என தெரிய வந்தது.

    இவர் மீது சீர்காழி, மயிலாடுதுறை, செம்பனார் கோயில், பொறையார், காரைக்கால் உள்ளிட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் திருட்டு வழக்கு உள்ளதென தெரியவந்தது. இதையடுத்து சுந்தர் திருடி பதுக்கி வைத்திருந்த 20 பைக்கை பறிமுதல் செய்து சுந்தரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×