search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    குன்னூரில் வெடி மருந்து கடத்தி வந்தவர் கைது

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெடி மருந்து கடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டார்.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் லெவல் கிராசிங் பகுதியில் இன்ஸ்பெக்டர் அம்மாத்துரை தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் ஈரோடு மாவட்டம் சத்திநாயக்கன் பாளையம் உக்கிரம் பகுதியை சேர்ந்த குப்புசாமி (46) வந்தார். அவரிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதில் ஒன்றரை கிலோ வெடி மருந்து இருந்தது.

    அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். குப்புசாமி கைது செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் கூறியதாவது-

    குப்புசாமி திருவிழா காலங்களில் வாண வேடிகைக்கு வெடிகளை சப்ளை செய்பவர் ஆவார். திருப்பூரில் இருந்து வெடி பொருட்களை வாங்கி வந்ததாக கூறினார். இந்த வெடி பொருட்களுடன் கன் பவுடர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை சேர்த்து பன்றிக்கு வைக்கும் வெடி தயாரிக்கப்படுகிறது.

    குப்புசாமி யாருக்கு சப்ளை செய்ய இந்த வெடி மருந்துகளை கொண்டு சென்றார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    Next Story
    ×