search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    ஈரோடு கல்லூரி மாணவி திடீர் மரணம்

    ஈரோடு கல்லூரி மாணவி திடீரென மயங்கி விழுந்து மரணம் அடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    நாமக்கல் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மகள் சாதனா (வயது 19) ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு பயோ மெடிக்கல் படித்து வந்தார். இதற்காக அந்த கல்லூரியின் விடுதியில் தங்கி படித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவில் மாணவிக்கு திடீரென வலிப்பு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து விடுதியில் தங்கி இருந்த மற்ற மாணவிகள் இது குறித்து காப்பாளருக்கு தகவல் தெரிவித்தனர்.

    பின்னர் அந்த மாணவி சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அந்த மாணவி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து டவுன் பிஎஸ்பி ராஜு தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×