என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காட்பாடி அருகே 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த முதியவருக்கு 10 ஆண்டு ஜெயில்
Byமாலை மலர்20 Nov 2019 11:47 AM GMT (Updated: 20 Nov 2019 11:47 AM GMT)
காட்பாடி அருகே 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து வேலூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
வேலூர்:
காட்பாடி அருகே உள்ள சேர்க்காடு கம்மவார் தெருவை சேர்ந்தவர் மோகன்தாஸ் (வயது62). 2017-ம் ஆண்டு ஜூலை 30-ந்தேதி இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த 5 வயது சிறுமி தெருவில் விளையாடிக் கொண்டிருந்தாள்.
அப்போது மோகன்தாஸ் சாக்லேட் தருவதாக கூறி சிறுமியை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். வீடு திரும்பிய சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டது.
சிறுமியை பரிசோதித்த பெற்றோர் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதை அறிந்தனர். இதுபற்றி திருவலம் போலீசில் புகார் அளித்தனர்.
இந்த வழக்கு காட்பாடி மகளிர் போலீசுக்கு மாற்றப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மோகன் தாசை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை வேலூர் மகளிர் கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம் இன்று தீர்ப்பு அளித்தார். அதில் மோகன்தாசுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை மற்றும் ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தார். கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை என்று தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.
காட்பாடி அருகே உள்ள சேர்க்காடு கம்மவார் தெருவை சேர்ந்தவர் மோகன்தாஸ் (வயது62). 2017-ம் ஆண்டு ஜூலை 30-ந்தேதி இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த 5 வயது சிறுமி தெருவில் விளையாடிக் கொண்டிருந்தாள்.
அப்போது மோகன்தாஸ் சாக்லேட் தருவதாக கூறி சிறுமியை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். வீடு திரும்பிய சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டது.
சிறுமியை பரிசோதித்த பெற்றோர் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதை அறிந்தனர். இதுபற்றி திருவலம் போலீசில் புகார் அளித்தனர்.
இந்த வழக்கு காட்பாடி மகளிர் போலீசுக்கு மாற்றப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மோகன் தாசை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை வேலூர் மகளிர் கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம் இன்று தீர்ப்பு அளித்தார். அதில் மோகன்தாசுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை மற்றும் ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தார். கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை என்று தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X