search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் நிறுத்தம்
    X
    மின்சாரம் நிறுத்தம்

    மொடக்குறிச்சி-மூலப்பாளையம் ஈரோடு புறநகர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

    மொடக்குறிச்சி-மூலப்பாளையம் ஈரோடு புறநகர் பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு தெற்கு கோட்டத்திற்குட்பட்ட கஸ்பாபேட்டை துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதையொட்டி அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது:-

    கஸ்பாபேட்டை, முள்ளாம்பரப்பு, சின்னியம்பாளையம், வேலாங்காட்டு வலசு, பொட்டிநாய்க்கன்வலசு, வீரப்பம்பாளையம், 46புதூர், ரங்கம்பாளையம், குறிக்காரன்பாளையம், செல்லப்பம்பாளையம், கோவிந்தநாய்க்கன் பாளையம், நஞ்சை ஊத்துக்குளி, செங்கரைபாளையம், டி.மேட்டுப்பாளையம், ஆணைக்கல்பாளையம், ஈ.பி.நகர், கே.ஏ.எஸ்.நகர், இந்தியன் நகர், டெலிபோன் நகர், பாரதி நகர், மூலப்பாளையம், செட்டிபாளையம், சடையம்பாளையம், திருப்பதி கார்டன், முத்துகவுண்டன்பாளையம், கருந்தேவன்பாளையம், சாவடிபாளையம்புதூர், கிளியம்பட்டி, ரகுபதி நாயக்கன்பாளையம், காகத்தான்வலசு.

    இதேபோல் எழுமாத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணி நடக்க இருப்பதையொட்டி கீழ்கண்ட இடங்களில் மின்சாரம் இருக்காது.

    எழுமாத்தூர், மண்கரடு, செல்லாத்தாபாளையம், பாண்டிபாளையம், எல்லக்கடை, காதக்கிணறு, குலவிளக்கு, மொடக்குறிச்சி, குளூர், வடுகபட்டி, 60 வேலம்பாளையம், மணியம்பாளையம், வெள்ள பெத்தாம்பாளையம், வே.புதூர், கணபதிபாளையம், ஆனந்தம்பாளையம், எரப்பம்பாளையம், மின்னக்காட்டு வலசு, வெப்பிலி மற்றும் 24 வேலம்பாளையம்.

    இந்த தகவலை ஈரோடு தெற்கு செயற்பொறியாளர் முத்துவேல் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×