search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் கைதான 5 பேரை படத்தில் காணலாம்.
    X
    மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் கைதான 5 பேரை படத்தில் காணலாம்.

    நாகையில் மாணவியை மிரட்டி கூட்டு பலாத்காரம்- போக்சோ சட்டத்தில் 5 பேர் கைது

    மாணவியை ஒரு மாதமாக கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்த 5 பேரை போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    கடலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்த தம்பதியினர் நாகை வேளாங்கண்ணியில் ஒரு தனியார் விடுதி அருகில் தங்கியுள்ளனர். இவர்கள் வேளாங்கண்ணி பேரூராட்சியில் துப்புரவு பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

    இந்த தம்பதியினரின் 14 வயது மகள் புதுச்சேரி விடுதியில் தங்கி அரசு உதவிபெறும் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் விடுமுறைக்காக வேளாங்கண்ணியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்தார். இவர் ஏப்ரல், மே விடுமுறையான இரண்டு மாதம் தனது பெற்றோர் வீட்டில் தங்கி இருந்தார்.

    அப்போது பெற்றோர் தனது மகளை வீட்டில் விட்டு வேலைக்கு சென்று விட்டனர்.

    இந்த நிலையில் மாணவி அருகில் உள்ள தாஸ்(வயது 41) என்பவர் வீட்டுக்கு டி.வி. பார்க்க சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சூர்யா (20) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இதை சூர்யா பயன்படுத்திக் கொண்டு மாணவிக்கு ஆசைவார்த்தை கூறி பல இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    இதை தனது நண்பர்களிடம் சூர்யா கூறினார். இதை சூர்யாவின் நண்பர்கள் ரூபன் காரல் மார்க்ஸ்(22), கோகுல்(19), வீரையன்(19) ஆகியோர் மாணவியை மிரட்டி வரவழைத்து பல நாட்களாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த வி‌ஷயம் தாசுக்கும் தெரிய வந்தது. இதனால் அவரும் இந்த 4 வாலிபர்களுடன் சேர்ந்து கொண்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    மாணவியை ஒரு மாதமாக சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அழைத்து 5 பேரும் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

    இதற்கிடையே பள்ளி விடுமுறை முடிந்ததால் மாணவி புதுச்சேரிக்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளியில் மாணவி திடீரென மயக்கம் போட்டு கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள், ஆசிரியர்கள் மாணவியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்போது மாணவியை டாக்டர்கள் பரிசோதித்த போது, அவர் 7 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

    இதுபற்றி மாணவியின் பெற்றோரிடம் தெரிவித்தப்பட்டது. அப்போது மாணவியிடம் பெற்றோர் அதட்டி கேட்டபோது, வேளாங்கண்ணியில் ஒரு மாதமாக கூட்டு பாலியல் பலாத்காரம செய்யப்பட்ட விவரத்தை தெரிவித்தார்.

    இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினத்திடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் தனிப்படை அமைக்கப்பட்டு மாணவியிடம் ரகசியமாக விசாரணை நடந்தது.

    இதையடுத்து மாணவி கொடுத்த புகாரின்பேரில் அனைத்து மகளிர் போலீசார் , பாலியியல் பலாத்காரம் செய்த சூர்யா, ரூபன் காரல் மார்க்ஸ், கோகுல், வீரையன், தாஸ் ஆகிய 5 பேரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×