என் மலர்
செய்திகள்

கைது
வாகன சோதனை - காரில் ஆடுகள் கடத்திய 4 வாலிபர்கள் கைது
நாகூரில் காரில் ஆடுகள் கடத்திய 4 வாலிபர்களை வாகன சோதனையின்போது கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து காரையும் ஆடுகளையும் பறிமுதல் செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் நாகூர் காவல் நிலைய போலீசார் மேலவாஞ்சூர் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திட்டச்சேரி வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அந்த காரில் 3 ஆடுகள் இருந்தது. விசாரணையில் வடக்கு பால்பண்ணைச்சேரி சிவசத்திநகரை சேர்ந்த ஷாகுல் ஹமீது மகன் தமிம் அன்சாரி (வயது 28) மற்றும் காடம்பாடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜகபர் சாதிக் மகன் முஹம்மது செய்யது (23), வெளிப்பாளையம் பச்சை பிள்ளையார் கோவில் தெரு சேர்ந்த மாயி மகன் தனுஷ் (19), செல்வகுமார் மகன் மகேந்திரன் (23) ஆகியோர் ஆடுகளை கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் காரையும், ஆடுகளையும் பறிமுதல் செய்து, 4 பேரையும் கைது செய்தனர்.
நாகை மாவட்டம் நாகூர் காவல் நிலைய போலீசார் மேலவாஞ்சூர் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திட்டச்சேரி வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அந்த காரில் 3 ஆடுகள் இருந்தது. விசாரணையில் வடக்கு பால்பண்ணைச்சேரி சிவசத்திநகரை சேர்ந்த ஷாகுல் ஹமீது மகன் தமிம் அன்சாரி (வயது 28) மற்றும் காடம்பாடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜகபர் சாதிக் மகன் முஹம்மது செய்யது (23), வெளிப்பாளையம் பச்சை பிள்ளையார் கோவில் தெரு சேர்ந்த மாயி மகன் தனுஷ் (19), செல்வகுமார் மகன் மகேந்திரன் (23) ஆகியோர் ஆடுகளை கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் காரையும், ஆடுகளையும் பறிமுதல் செய்து, 4 பேரையும் கைது செய்தனர்.
Next Story






