search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சிவகங்கையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 15-ந் தேதி நடக்கிறது

    சிவகங்கையில் வருகிற 15-ந் தேதி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ‘வேலை வாய்ப்பு வெள்ளி” என்ற தலைப்பின் கீழ் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது.

    இந்த வேலைவாய்ப்பு முகாமில் வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம். வேலைநாடுநர்களும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பினைப் பெறலாம்.

    அதன் அடிப்படையில் வருகிற 15-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் சென்னையில் உள்ள வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    இதில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த வேலைநாடும் ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம்.

    இந்த முகாமில் கலந்து கொள்ளும் வேலைநாடுநர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பிற்கு பதிவு, வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை, இலவச திறன் பதிவு போன்ற சலுகைகளும் வழங்கப்படும்.

    முகாமில் பணிவாய்ப்பு பெறுவோருக்கு பதிவுமூப்பு ரத்து செய்யப்படமாட்டது .

    இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×