என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பெருந்துறை அருகே குட்டையில் குளித்த அதிகாரி மூழ்கி பலி
பெருந்துறை:
பெருந்துறை அருகே உள்ள சிப்காட்டில் ஜீனியர் என்ஜினியராக பணிபுரிந்து வந்தவர் ஜெரோம் (வயது 53).
இவரது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை.
இவர் கடந்த 3 மாதத்துக்கு முன் பதவி உயர்வு பெற்று மானாமதுரையில் உள்ள சிப்காட் அலுவலகத்தில் புராஜக்ட் அதிகாரியாக பணி புரிந்து வந்தார்.
இந்த நிலையில் வேலை காரணமாக பெருந்துறை சிப்காட் அலுவலகம் வந்தார். பிறகு அருகில் உள்ள செயற்கை குட்டையில் குளிக்க சென்றார்.
தனது உடைகள் மற்றும் செல்போனை கரையில் வைத்து விட்டு குளிக்க இறங்கிய அவர் வெகு நேரமாகியும் கரைக்கு வரவில்லை. இதனால் மற்ற பணியாளர்கள் குட்டையில் இறங்கி அவரை தேடினர். 30 நிமிட தேடுதல் பணிக்குப்பிறகு ஜெரோம் உடல் மீட்கப்பட்டது. குளிக்கும் போது அவர் தண்ணீரில் மூழ்கி பலியானார்.
அவரது உடலை பெருந்துறை தீயணைப்பு வீரர்கள் மீட்டு பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேதபரி சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்