search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    போதிய ஆசிரியர்கள் இல்லை - சீருடையுடன் மனு கொடுக்க வந்த பள்ளி மாணவர்கள்

    50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி சீருடையுடன் கலெக்டரை சந்தித்து போதிய ஆசிரியர்கள் இல்லை என மனு கொடுத்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் சத்தியமங்கலம் அடுத்த சிக்கரசம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி சீருடையுடன் தங்களது பெற்றோருடன் வந்து கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.

    நாங்கள் சத்தியமங்கலம் அடுத்த சிக்கரசம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் படித்து வருகிறோம் இங்கு 1 -ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 160 மாணவ மாணவிகள் தற்போது படித்து வருகின்றனர்.

    எங்களுக்கு ஒரு தலைமை ஆசிரியரும் ஒரு இடைநிலை ஆசிரியர் மட்டுமே பயிற்று வருகின்றனர். போதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. 5 ஆசிரியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் வெறும் 2 ஆசிரியர் மட்டுமே உள்ளனர்.

    இதனால் எங்களது கல்வி பாதிக்கப்படுகிறது எனவே எங்கள் பள்ளியில் தேவையான ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    Next Story
    ×