search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கோபி அருகே அரசு பஸ் மோதி போலீஸ்காரர் பலி

    கோபி அருகே இன்று மதியம் அரசு பஸ் மோதி போலீஸ்காரர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோபி:

    கோபி அருகே உள்ள கள்ளிப்பட்டியை சேர்ந்தவர வரதராஜன் (வயது 27). இவர் பங்களாபுதூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணி புரிந்து வந்தார்.

    இவர் இன்று மதியம் தனது மோட்டார் சைக்கிளில் முதல்வரின் பாதுகாப்பு பணிக்காக சித்தோட்டுக்கு சென்றார். மதியம் 12.40 மணி அளவில் கோபி கரட்டடிபாளையம் அருகே வந்த போது அந்த வழியாக வந்த அரசு பஸ் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த அவரை கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கபபட்டது. இதுகுறித்துகோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விபத்தில் பலியான போலீஸ்கார் வரதராஜன் உடல் கோபி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது.
    Next Story
    ×