search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    அரியலூரில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

    அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பா.ஜ.க., அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பா.ஜ.க., அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்தார். நகர தலைவர் சந்திரசேகர் வரவேற்று பேசினார்.

    அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயற்குழு உறுப்பினர் மணிரத்தினம், பெரம்பலூர் மாவட்ட தலைவர் தமிழ்ச் செல்வன், விழுப்புரம் மாவட்ட தலைவர் ரமேஷ், முன்னாள் மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், செய்தி தொடர்பாளர் சிவக்குமார், மாவட்ட துணைத் தலைவர் பழனிசாமி, பொதுச்செயலாளர் ரவிச்சந்திரபோஸ்,

    வட்டார தலைவர் கர்ணன், திருநாவுக்கரசு, தியாகராஜன், கொளஞ்சி நாதன், நகர துணை தலைவர் செந்தில், நகர பொருளாளர் செந்தில், ஊடக பிரிவு அறிவுடைநம்பி, ஜெயங்கொண்டம் சங்கர், திருமானூர் தேவா, வர்த்தக பிரிவு ஆண்டனி, மகிளா பிரிவு மாரியம்மாள், சின்ன பொண்ணு, சகுந்தலா, சேவாதளம் சிவா, பூண்டி சந்தானம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, தமிழக பொறுப்பாளர் ஸ்ரீவல்லபிரசாத், காங்கிரஸ் செயல்தலைவர் விஷ்ணு பிரசாத் எம்.பி., பொதுச்செயலாளர் கீழனூர் ராஜேந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். கூட்ட முடிவில் செய்தி தொடர்பாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.
    Next Story
    ×