என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பெருந்துறை அருகே விபத்து- 2 பேர் பலி
பெருந்துறை:
பெருந்துறை அடுத்த சீனாபுரம் ஆயிக்கவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 42).
அதே பகுதியில் தறிப்பட்டறை வைத்து நடத்தி வரும் அவரது தறிப்பட்டறையில் சீனாபுரம் சூரநாய்க்கனூர் பகுதியை சேர்ந்த விஜயகுமார்(37) வேலை பார்த்து வந்தார்.
நேற்று காலை ஜனார்த்தனன் தறிப்பட்டறைக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக தனது பட்டறையில் வேலை பார்க்கும் விஜயகுமாருடன் மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
இவர்களுடன் விஜயகுமாரின் மனைவி மேனகா (34)வும் சென்றார். பைக்கை விஜயகுமார் ஓட்டினார்.ஜனார்த்தனன் மற்றும் மேனகா ஆகிய இருவரும் பின்னால் அமர்ந்து கொண்டு சென்றனர். இவர்கள் பெருந்துறை பெத்தாம்பாளையம் ரோடு பைபாஸ் பகுதியில் ரோட்டை கடந்தார்.
அப்போது கோவையில் இருந்து சேலம் நோக்கி சென்ற மினிஆட்டோ எதிர்பாராதவிதமாக இவர்களது மீது மோதியது.
இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட 3 பேரும் தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஜனார்த்தனன் மற்றும் விஜயகுமார் இருவரும் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேனகா படுகாயத்துடன் ஆஸ்த்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்