என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பண்ருட்டியில் மதுபோதையில் பள்ளிக்கு வந்த 2 மாணவர்கள் இடைநீக்கம்
Byமாலை மலர்9 Nov 2019 3:57 AM GMT (Updated: 9 Nov 2019 3:57 AM GMT)
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் மதுபோதையில் பள்ளிக்கு வந்த 2 மாணவர்களை 7 நாட்கள் பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி காந்தி சாலையில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பண்ருட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் 2 மாணவர்கள் மது குடித்துவிட்டு பள்ளிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் போதை தலைக்கேறிய உடன் வகுப்பறையில் சத்தமாக பேசிக்கொண்டிருந்தனர். சத்தம்கேட்டு பக்கத்து வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் ஒருவர் அங்கு வந்தார். அந்த 2 மாணவர்களையும் கண்டித்தார். அப்போது அந்த மாணவர்கள் 2 பேரும் மதுகுடித்திருப்பதை கண்டு ஆசிரியர் அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவித்தார். தலைமை ஆசிரியர் பூவராகவமூர்த்தி பண்ருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்து அந்த 2 மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் மாணவர்கள் மது குடித்துவிட்டு பள்ளிக்கு வந்திருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து மாணவர்கள் 2 பேரையும் 7 நாட்கள் பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி காந்தி சாலையில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பண்ருட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் 2 மாணவர்கள் மது குடித்துவிட்டு பள்ளிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் போதை தலைக்கேறிய உடன் வகுப்பறையில் சத்தமாக பேசிக்கொண்டிருந்தனர். சத்தம்கேட்டு பக்கத்து வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் ஒருவர் அங்கு வந்தார். அந்த 2 மாணவர்களையும் கண்டித்தார். அப்போது அந்த மாணவர்கள் 2 பேரும் மதுகுடித்திருப்பதை கண்டு ஆசிரியர் அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவித்தார். தலைமை ஆசிரியர் பூவராகவமூர்த்தி பண்ருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்து அந்த 2 மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் மாணவர்கள் மது குடித்துவிட்டு பள்ளிக்கு வந்திருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து மாணவர்கள் 2 பேரையும் 7 நாட்கள் பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X