search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை (கோப்புப்படம்)
    X
    தற்கொலை (கோப்புப்படம்)

    ஈரோட்டில் மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை

    ஈரோட்டில் மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் இருந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு லேஅவுட் வி.வி.சி.ஆர் நகரைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 39). இவருக்கு திருமணமாகி மனைவி இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

    இதனால் மனவேதனையில் இருந்த ஜெகதீஷ் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனால் விரக்தியில் இருந்த ஜெகதீஷ் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு கொண்டார்.

    அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஜெகதீஸ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×