என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஈரோட்டில் அரசு மாணவர்கள் விடுதிக்குள் புகுந்து தகராறு- 2 வாலிபர்கள் கைது
ஈரோடு:
ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் அருகில் அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி உள்ளது. இந்த விடுதியின் காப்பாளராக வெங்கடாச்சலம்(வயது40) உள்ளார்.
இந்நிலையில், சம்பவத்தன்று இரவு மாணவர்கள் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது, ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு அண்ணாநகரை சேர்ந்த முகமது தவுபிக்(24), அசோகபுரி ஓடைபள்ளம் பெரியார்நகரை சேர்ந்த வசந்தகுமார்(21) ஆகிய 2பேர் விடுதிக்குள் அத்துமீறி உள்ளே நுழைந்து, மாணவர்களின் சாப்பாட்டினை பிடிங்கி தகராறு செய்தனர்.
இதைப்பார்த்த வெங்கடாச்சலம் அந்த வாலிபர்களை தட்டிகேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த முகமது தவுபிக், வசந்தகுமார் இருவரும் காப்பாளரை தகாத வார்த்தையால் பேசி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசில் வெங்கடாச்சலம் அளித்த புகாரின் பேரில், முகமது தவுபிக், வசந்தகுமார் ஆகிய இருவரையும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்