என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கூரை வீடு எரிந்து பெண் உயிருடன் கருகி பலி
Byமாலை மலர்1 Nov 2019 4:10 PM GMT (Updated: 1 Nov 2019 4:10 PM GMT)
மயிலாடுதுறை அருகே கூரை வீட்டில் சமையல் செய்த பெண் தீயில் கருகி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த கீழபட்ட மங்கலத்தை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகள் சுகுணாதேவி(வயது37) இவருக்கும், முனியசாமி என்பவருக்கும் திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சுகுணாதேவி கணவரை பிரிந்து தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார். அங்கு ஒரு கூரைவீட்டில் சுகுணா வசித்து வந்தார். அவரது குழந்கைள் வெளியூரில் தங்கி படித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் சுகுணாதேவி வீட்டில் சமையல் செய்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீப்பிடித்தது. அந்த தீ வீட்டிலும் பரவியது. இதைத்தொடர்ந்து தீயில் கருகி சுகுணாதேவி பரிதாபமாக இறந்தார். வீடும் எரிந்து முற்றிலும் சேதமானது.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் சிங்காரவேல் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுகுணாதேவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவரது சாவில் மர்மம் உள்ளதா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார். கூரை வீட்டில் சமையல் செய்த பெண் தீயில் கருகி பலியான சம்பவம் கீழபட்டமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த கீழபட்ட மங்கலத்தை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகள் சுகுணாதேவி(வயது37) இவருக்கும், முனியசாமி என்பவருக்கும் திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சுகுணாதேவி கணவரை பிரிந்து தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார். அங்கு ஒரு கூரைவீட்டில் சுகுணா வசித்து வந்தார். அவரது குழந்கைள் வெளியூரில் தங்கி படித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் சுகுணாதேவி வீட்டில் சமையல் செய்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீப்பிடித்தது. அந்த தீ வீட்டிலும் பரவியது. இதைத்தொடர்ந்து தீயில் கருகி சுகுணாதேவி பரிதாபமாக இறந்தார். வீடும் எரிந்து முற்றிலும் சேதமானது.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் சிங்காரவேல் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுகுணாதேவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவரது சாவில் மர்மம் உள்ளதா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார். கூரை வீட்டில் சமையல் செய்த பெண் தீயில் கருகி பலியான சம்பவம் கீழபட்டமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X