search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    ஈரோடு அருகே வேன் டிரைவர் லாரி மோதி பலி

    ஈரோடு அருகே வேன் டிரைவர் லாரி மோதி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்தவர் நரசிம்ம மூர்த்தி (வயது 40). கோவை துடியலூரை சேர்ந்தவர் நேரு (55).

    இவர்கள் இருவரும் மினி டோர் வேனில் கண்ணாடி பாரம் ஏற்றி கொண்டு அந்தியூரில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தனர்.

    இந்த வேன் டி.என்.பாளையம் அருகே வரப்பள்ளம் என்ற இடத்தில் வந்த போது கயிறு லூசாகி விட்டதால் அதை சரி செய்ய இருவரும் வேனை விட்டு இறங்கினர்.

    அவர்கள் லூசான கயிற்றை சரி செய்தனர். அப்போது பின்னால் மேட்டுப்பாளையத்தில் இருந்து உருளை கிழங்கு ஏற்றி கொண்டு வந்த லாரி திடீரென அவர்கள் மீது மோதியது.

    இதில் நரசிம்ம மூர்த்தியும், நேருவும் படுகாயம் அடைந்தனர். இதில் நரசிம்ம மூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த நேரு கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விபத்து குறித்து பங்களாபுதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×