என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேதாரண்யம் அருகே இளம்பெண் மர்ம மரணம்
Byமாலை மலர்28 Oct 2019 11:32 AM GMT (Updated: 28 Oct 2019 11:32 AM GMT)
வேதாரண்யம் அருகே இளம்பெண் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்த சம்பவம் வாய்மேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே வாய்மேடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் ரம்யா (வயது 21). இவர் பி.காம் படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இளம்பெண் ரம்யா வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதை பார்த்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே இதுபற்றி வாய்மேடு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முனியாண்டி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரம்யா உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்.
இளம்பெண் ரம்யா எப்படி இறந்தார்? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறெதும் காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இளம்பெண் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்த சம்பவம் வாய்மேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X