search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    46.53 அடியை எட்டிய நிலையில் கடல் போல் காட்சியளிக்கும் வீராணம் ஏரியை படத்தில் காணலாம்.
    X
    46.53 அடியை எட்டிய நிலையில் கடல் போல் காட்சியளிக்கும் வீராணம் ஏரியை படத்தில் காணலாம்.

    வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46.53 அடியாக உயர்வு

    வீராணம் ஏரி பகுதியில் தொடர்ந்து மழை பெய்துவருவதாலும் கீழணையில் இருந்து தண்ணீர் வருவதாலும் ஏரியின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி, டெல்டா விவசாயிகளுக்கு மிகப்பெரிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. 47.50 அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியின் மூலம் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெற்று வருகிறது.

    இது தவிர சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதிலும் முக்கிய பங்கு வகித்து வருகிறது.

    கடந்த 4 நாட்களுக்கு முன்பாக 44.50 அடியாக ஏரியின் நீர் இருப்பு குறைந்தது. இந்த சூழ்நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதால், ஏரியில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

    அதே நேரத்தில், கீழணையில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 2 ஆயிரத்து 200 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் உயர தொடங்கி உள்ளது. நேற்றைய நிலவரப்படி நீர்மட்டம் 46.50 அடியாக இருந்தது. இந்நிலையில் கீழணையில் இருந்து திறக்கப்பட்ட நீரின் அளவு நேற்று மதியம் முதல் வினாடிக்கு 1,800 கனஅடியாக குறைக்கப்பட்டது. இன்று 1,200 கன அடிதண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. வீராணம் ஏரி பகுதியில் தொடர்ந்து மழை பெய்துவருவதாலும் கீழணையில் இருந்து தண்ணீர் வருவதாலும் ஏரியின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வீராணம் ஏரியின் இன்றைய நீர் மட்டம் 46.53 அடியாகும் .

    சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியிலிருந்து 56 கன அடி தண்ணீர் அனுப்பிவைக்கப்பட்டு வந்தது. இன்று 57 கன அடிதண்ணீர் அனுப்பிவைக்கப்பட்டது. வீராணம் ஏரியிலிருந்து விவாசாயத்திற்கு 66 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.
    Next Story
    ×