search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    ஒரகடம் அருகே பைக் மீது ஆட்டோ மோதி விபத்து - தொழிலாளி பலி

    ஒரகடம் அருகே பைக் மீது ஷேர் ஆட்டோ மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    படப்பை:

    செங்கல்பட்டு அடுத்த சிங்க பெருமாள் கோவிலில் இருந்து ஷேர் ஆட்டோ ஒன்று ஒரகடம் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது.

    ஒரகடம் அருகே சாலையில் திரும்பும்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதி ஷேர் ஆட்டோ கவிழ்த்தது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த ஒரகடம் அடுத்த சென்னகுப்பம் பகுதியை சேர்ந்த ரங்கநாதன் (50), பரனுர் பகுதியை சேர்ந்த சுஜாதா, மோட்டார் சைக்கிளில் வந்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த லோகநாதன் ஆகிய மூன்று பேர் படுகாயம் அடைந்து பொத்தேரி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    ரங்கநாதன் மேல் சிகிச்சைக்காக பல்லாவரம் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ரங்கநாதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஒரகடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    Next Story
    ×