search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருட்டு
    X
    திருட்டு

    திருப்போரூர் பகுதியில் ஒரே நாள் இரவில் 3 இடங்களில் திருட்டு

    திருப்போரூர் பகுதியில் ஒரேநாள் இரவில் 3 இடங்களில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்போரூர்:

    திருப்போரூரை அடுத்த கண்ணகப் பட்டு அபிராமி நகர் பகுதியில் வசித்து வருபவர் தயாநிதி. நேற்று இரவு முன்பக்க கதவை மூட மறந்துவிட்டு தூங்க சென்றுள்ளார். அப்போது நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர் பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகை -வெள்ளி குத்துவிளக்கு ரூ5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளான். 

    கண்ணகப்பட்டு மாரியம்மன்கோயில் தெருவில் வசிக்கும் கோவிந்தசாமி இவருடைய மனைவி வசந்தி நேற்று இரவு கதவை திறந்து வைத்து தூங்கியுள்ளார். அப்போது வீட்டிற்குள் வந்த ஒருவர் இவரது கழுத்தில் கிடந்த இரண்டரை பவுன் தங்கநகையை பறித்துக்கொண்டு சென்றுவிட்டான்.

    இது தவிர திரெள பதியம்மன் கோயில் தெருவில் வசித்து வரும் அழகர்சாமி வீட்டுக்குள்ளும் நள்ளிரவு வீடு புகுந்த திருடன் அவரது மனைவி கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கநகையை பறித்துக்கொண்டு சென்று விட்டான். இந்த 3 சம்பவங்கள் குறித்தும் திருப்போரூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×