search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    போதிய பயணிகள் இல்லாததால் சென்னை-திருச்சிக்கு 2 விமானங்கள் ரத்து

    போதிய பயணிகள் இல்லாததால் சென்னை - திருச்சிக்கு செல்ல வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து திருச்சிக்கு இன்று அதிகாலை 4.55 மணிக்கு செல்ல வேண்டிய இன்டிகோ விமானம், திருச்சியில் இருந்து சென்னைக்கு காலை 8.50 மணிக்கு வர வேண்டிய இன்டிகோ விமானம் ஆகிய 2 விமானங்கள் போதிய பயணிகள் இல்லாததால் இன்று ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    சென்னையில் இருந்து மதுரைக்கு காலை 9 மணிக்கு செல்ல வேண்டிய ஏர்இந்தியா விமானம் எந்திர கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த விமானத்தில் செல்ல இருந்த 49 பயணிகள் மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
    Next Story
    ×