என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோத்தகிரியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை- வியாபாரி கைது
Byமாலை மலர்15 Oct 2019 4:41 AM GMT (Updated: 15 Oct 2019 4:41 AM GMT)
கோத்தரிகியில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வியாபாரியை பிடித்த பொதுமக்கள் தர்மஅடித்து கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
கோத்தகிரி:
கோவை மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோட்டை சேர்ந்தவர் ஜவகர்தீன்(வயது 43). வியாபாரி. இவர் தனது நண்பர் ஒருவருடன் காய்கறி வியாபாரம் செய்வதற்காக மேட்டுப்பாளையத்தில் இருந்து ஆட்டோ மூலம் காய்கறிகளை ஏற்றிக் கொண்டு கோத்தகிரிக்கு சென்றார். அங்கு வியாபாரம் செய்து கொண்டு இருந்தனர்.
அப்போது ஜவகர்தீனுக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டது. இதற்காக அருகில் உள்ள வீட்டிற்கு சென்று குடிக்க தண்ணீர் கேட்டார். வீட்டில் 12 வயது சிறுமி மட்டும் தனியாக இருந்தார். சிறுமியிடம் தண்ணீர் வாங்கி குடித்த ஜவகர்தீன் வீட்டில் யாரும் இல்லாததால் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி சத்தம் போட்டார்.
அவரது சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டவரை பிடித்து தர்ம அடி கொடுத்து கோத்தகிரி போலீசில் ஒப்படைத்தனர்.
அப்போது கோத்தகிரி போலீசார் அவரை குன்னூர் மகளிர் போலீசில் நிலையத்தில் ஒப்படைக்கும்படி கூறினர். இதையடுத்து ஜவகர்தீனை பொதுமக்கள் குன்னூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோட்டை சேர்ந்தவர் ஜவகர்தீன்(வயது 43). வியாபாரி. இவர் தனது நண்பர் ஒருவருடன் காய்கறி வியாபாரம் செய்வதற்காக மேட்டுப்பாளையத்தில் இருந்து ஆட்டோ மூலம் காய்கறிகளை ஏற்றிக் கொண்டு கோத்தகிரிக்கு சென்றார். அங்கு வியாபாரம் செய்து கொண்டு இருந்தனர்.
அப்போது ஜவகர்தீனுக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டது. இதற்காக அருகில் உள்ள வீட்டிற்கு சென்று குடிக்க தண்ணீர் கேட்டார். வீட்டில் 12 வயது சிறுமி மட்டும் தனியாக இருந்தார். சிறுமியிடம் தண்ணீர் வாங்கி குடித்த ஜவகர்தீன் வீட்டில் யாரும் இல்லாததால் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி சத்தம் போட்டார்.
அவரது சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டவரை பிடித்து தர்ம அடி கொடுத்து கோத்தகிரி போலீசில் ஒப்படைத்தனர்.
அப்போது கோத்தகிரி போலீசார் அவரை குன்னூர் மகளிர் போலீசில் நிலையத்தில் ஒப்படைக்கும்படி கூறினர். இதையடுத்து ஜவகர்தீனை பொதுமக்கள் குன்னூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X