என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மனைவி குடும்பம் நடத்த வர மறுப்பு - வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்11 Oct 2019 10:35 AM GMT (Updated: 11 Oct 2019 10:35 AM GMT)
திருச்சி அருகே மனைவி குடும்பம் நடத்த வர மறுப்பு தெரிவித்ததால் வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னமராவதி:
திருச்சி சொக்கம்பட்டி அருகே உள்ள அயன் பொருவாய் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 39). இவரது மனைவி தமிழரசி (30). இவர்கள் கோயமுத்தூரில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு வந்துள்ளது. இதனால் தமிழரசி கோபித்துக்கொண்டு பொன்னமராவதி அருகே கொன்னையம்பட்டியில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு வந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து கடந்த 24ம்தேதி தமிழரசியை அழைத்து செல்ல கொன்னையம்பட்டிக்கு முருகேசன் வந்து கூப்பிட்டுள்ளார். ஆனால் தமிழரசி வரவில்லை. மீண்டும் கடந்த 25ம்தேதி தமிழரசியை அழைத்தபோது அவர் வராததால் மனமுடைந்த முருகேசன் தான்கொண்டு வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் முருகேசன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து முருகேசனின் தாய் சிவபாக்கியம், காரையூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
திருச்சி சொக்கம்பட்டி அருகே உள்ள அயன் பொருவாய் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 39). இவரது மனைவி தமிழரசி (30). இவர்கள் கோயமுத்தூரில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு வந்துள்ளது. இதனால் தமிழரசி கோபித்துக்கொண்டு பொன்னமராவதி அருகே கொன்னையம்பட்டியில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு வந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து கடந்த 24ம்தேதி தமிழரசியை அழைத்து செல்ல கொன்னையம்பட்டிக்கு முருகேசன் வந்து கூப்பிட்டுள்ளார். ஆனால் தமிழரசி வரவில்லை. மீண்டும் கடந்த 25ம்தேதி தமிழரசியை அழைத்தபோது அவர் வராததால் மனமுடைந்த முருகேசன் தான்கொண்டு வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் முருகேசன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து முருகேசனின் தாய் சிவபாக்கியம், காரையூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X