search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாமல்லபுரம்
    X
    மாமல்லபுரம்

    மாமல்லபுரம் பகுதியில் சுற்றிய 4 சீன வாலிபர்களிடம் போலீசார் விசாரணை

    மாமல்லபுரம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றிய 4 சீன வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையையொட்டி மாமல்லபுரம் பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளது. தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று காலை மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றிய 4 சீன வாலிபர்களை போலீசார் பிடித்தனர். இதில் ஒருவரிடம் பாஸ்போர்ட் இல்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் 4 சீன வாலிபர்களிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×