என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தபால் அதிகாரி வீட்டில் 140 பவுன் நகைகள் கொள்ளை
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ளது ரஸ்தா. இங்குள்ள காதி நகரைச் சேர்ந்தவர் ஜெய ராஜ் (வயது60). ஓய்வு பெற்ற தபால் அதிகாரி. இவரது மனைவி காணிக்கை மேரி.
இவர்களது 3 மகன்களும் பெங்களூர், ராமேசுவரம் பகுதிகளில் வசித்து வருகின்றனர். கடந்த 26-ந்தேதி ராமேசுவரத்தில் இருக்கும் மகன் வீட்டிற்கு ஜெயராஜூம், காணிக்கைமேரியும் சென்றனர்.
இதனால் ரஸ்தாவில் உள்ள வீட்டில் யாரும் இல்லை. வீடு பூட்டிக் கிடந்தது. இதனை அறிந்த மர்ம மனிதர்கள் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். ஒவ்வொரு அறைக்கும் சென்று பீரோ, சூட்கேஸ் ஆகியவற்றை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர்.
நேற்று இரவு ஜெயராஜ் மனைவியுடன் வீடு திரும்பினார். வீட்டிற்குள் பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது தான் கொள்ளை சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சோமநாதபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
வீட்டில் இருந்த 140 பவுன் நகைகள் கொள்ளை போயிருப்பதாக போலீசாரிடம் ஜெயராஜ் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்