என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டி.என்.பாளையம் அருகே குளத்தில் மூழ்கி ஆடு மேய்க்கும் தொழிலாளி பலி
Byமாலை மலர்28 Sep 2019 9:50 AM GMT (Updated: 28 Sep 2019 9:50 AM GMT)
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே குளத்தில் மூழ்கி ஆடு மேய்க்கும் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
டி.என்.பாளையம்:
நஞ்சை புளியம்பட்டி சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது44). இவர் பல ஊர்களுக்கு சென்று பட்டி போட்டு அப்பகுதிலேயே ஆடுகள் மேய்க்கும் தொழில் செய்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று மதியம் சுமார் 2 மணியளவில் டி.என்.பாளையம் அடுத்த பெருமுகை சஞ்சீவராயன் கோவில் வனத்தை ஒட்டிய பகுதியில் பழனிச்சாமி ஆடுகளை மேய்ந்து கொண்டிருந்தார்.
ஆடுகளை மேய்த்து விட்டு அருகில் இருக்கும் சஞ்சீவிராயன் குளத்தில் குளிக்க சென்ற பழனிச்சாமி குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்றதாக சொல்லப்படுகிறது.
இவருக்கு நீச்சல் தெரியாததால் சிறிது நேரத்தில் நீரில் மூழ்கினார். அந்த வழியாக வந்தவர்கள் சம்பவத்தை பார்த்து போலீஸ் மற்றும் தீயணைப்புதுறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோபி தீயணைப்புதுறையினர் பழனிசாமி உடலை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நஞ்சை புளியம்பட்டி சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது44). இவர் பல ஊர்களுக்கு சென்று பட்டி போட்டு அப்பகுதிலேயே ஆடுகள் மேய்க்கும் தொழில் செய்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று மதியம் சுமார் 2 மணியளவில் டி.என்.பாளையம் அடுத்த பெருமுகை சஞ்சீவராயன் கோவில் வனத்தை ஒட்டிய பகுதியில் பழனிச்சாமி ஆடுகளை மேய்ந்து கொண்டிருந்தார்.
ஆடுகளை மேய்த்து விட்டு அருகில் இருக்கும் சஞ்சீவிராயன் குளத்தில் குளிக்க சென்ற பழனிச்சாமி குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்றதாக சொல்லப்படுகிறது.
இவருக்கு நீச்சல் தெரியாததால் சிறிது நேரத்தில் நீரில் மூழ்கினார். அந்த வழியாக வந்தவர்கள் சம்பவத்தை பார்த்து போலீஸ் மற்றும் தீயணைப்புதுறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோபி தீயணைப்புதுறையினர் பழனிசாமி உடலை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X