search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    பொன்னமராவதியில் விபத்தில் வாலிபர் பலி

    பொன்னமராவதியில் டூவிலர் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    பொன்னமராவதி:

    பொன்னமராவதி அருகே உள்ள கட்டையாண்டிபட்டியை சேர்ந்த மெய்யப்பன் மகன் பாக்யராஜ்(வயது37).இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளனர். சிற்பியான இவர் பொன்னமராவதி சென்று விட்டு தனது டூவிலரில் சொந்த ஊரான கட்டையாண்டி பட்டிக்கு செல்லும் போது எதிரே வந்த சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதியதில் பாக்யராஜ் படுகாயமடைந்தார். 

    உடனடியாக அவரை மீட்டு  அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பாக்யராஜ் இறந்தார். இது குறித்து பொன்னமராவதி போலீசில் மனைவி புகார் செய்தார். 

    புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரக்கு வாகன டிரைவர் நெற்குப்பை அருண் என்பவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×