என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
    X
    சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

    சென்னிமலையில் இன்று குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

    சென்னிமலை டவுன் பகுதியில் இன்று குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    சென்னிமலை:

    சென்னிமலை டவுன் பகுதியில் நிலவும் கடும் குடிநீர் பற்றாக்குறையினை போக்க போர்கால நடவடிக்கை எடுக்க கோரி இன்று காலை 10:00 மணிக்கு தி.மு.க., வினர் பேரூராட்சி அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    சென்னிமலை பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளிலும் கடந்த இரண்டு மாதங்களாக கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவிவருகிறது. மேலும் 26 நாட்கள் ஆகியும் சென்னிமலை டவுன் பகுதிகளில் பல இடங்களுக்கு குடிநீர் சப்பளை செய்யப்படவில்லை.

    தண்ணீர் காவிரி ஆற்றில் அதிக அளவில் இருந்தும் சென்னிமலை பகுதிக்கு பற்றாக்குறை நிலவுவது மெத்த போக்கினை காட்டுகிறது. இதை கண்டித்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி அளவில் சென்னிமலை பேரூராட்சி அலுவலகத்தினை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர்.

    இந்த போராட்டத்திற்கு சென்னிமலை தெற்கு ஒன்றிய தி.மு.க., பொறுப்பாளர் தமிழ்செல்வன், நகர செயலாளர் ராமசாமி ஆகியோர் தலைமை தாங்கினர் இந்த முற்றுகை போராட்டத்தில் தி.மு.க., மற்றும் காங்கிரஸ் வட்டார தலைவர் சிவக்குமார் உட்பட தோழமை கட்சிகளின் நிர்வாகிகளும் மற்றும் சமூக நல அமைப்புகளும் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து காங்கயம் ரோட்டில் பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    போலீசார் குவிக்கப்பட்டனர், இதனால் பரபரப்பு நிலவியது.
    Next Story
    ×