என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு விமானப்படையில் வேலை - கலெக்டர் கதிரவன் தகவல்
Byமாலை மலர்24 Sep 2019 12:04 PM GMT (Updated: 24 Sep 2019 12:04 PM GMT)
பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு இந்திய விமானப்படை வேலைக்கான ஆள்சேர்ப்பு முகாம் நடக்கவுள்ளதாக ஈரோடு கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய விமானப்படையில் எஜூகேசினல் இன்ஸ்டெரக்டர் பணிக்கான ஆட்சேர்ப்பு முகாம் கோவை பாரதியார் பல்கலைக்கழக உள்விளையாட்டு அரங்கில் வரும் 17-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நடக்கிறது.
பி.எட் பட்டப்படிப்புடன் இளநிலை பட்டப்படிப்பு முடித்த ஆண்களாக இருக்க வேண்டும். 19-1-1995 முதல் 1-7-2000 தேதிக்குள் பிறந்திருப்பவராக இருக்க வேண்டும். இளநிலை பட்டப்படிப்பில் ஆங்கிலம் அல்லது இயற்பியல், உளவியல், வேதியியல், கணிதம், தகவல் தொடர்பியல், கணினி அறிவியல், புள்ளியியல் அல்லது பி.சி.ஏ பட்டப்படிப்பில் குறைந்த பட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
பி.எட் பட்டப்படிப்புடன் முதுகலை பட்டிப்படிப்பு படித்தவர்கள் 19-7-1992 முதல் 1-7-2000-ந் தேதிக்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். முதுநிலை பட்டப்படிப்பில் ஆங்கிலம், உளவியல் அல்லது கணிதம், இயற்பியல், புள்ளியியல், கணினி அறிவியல், தகவல் தொடர்பியல் அல்லது எம்.சி.ஏ.ஆகிய கல்வித் தகுதியுடன் குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு www.airmenselection.cdac.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இந்த பணிகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 11-ந் தேதி வரை நடக்கிறது. பயிற்சி வகுப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை 0424-2275860 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கலெக்டர் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய விமானப்படையில் எஜூகேசினல் இன்ஸ்டெரக்டர் பணிக்கான ஆட்சேர்ப்பு முகாம் கோவை பாரதியார் பல்கலைக்கழக உள்விளையாட்டு அரங்கில் வரும் 17-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நடக்கிறது.
பி.எட் பட்டப்படிப்புடன் இளநிலை பட்டப்படிப்பு முடித்த ஆண்களாக இருக்க வேண்டும். 19-1-1995 முதல் 1-7-2000 தேதிக்குள் பிறந்திருப்பவராக இருக்க வேண்டும். இளநிலை பட்டப்படிப்பில் ஆங்கிலம் அல்லது இயற்பியல், உளவியல், வேதியியல், கணிதம், தகவல் தொடர்பியல், கணினி அறிவியல், புள்ளியியல் அல்லது பி.சி.ஏ பட்டப்படிப்பில் குறைந்த பட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
பி.எட் பட்டப்படிப்புடன் முதுகலை பட்டிப்படிப்பு படித்தவர்கள் 19-7-1992 முதல் 1-7-2000-ந் தேதிக்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். முதுநிலை பட்டப்படிப்பில் ஆங்கிலம், உளவியல் அல்லது கணிதம், இயற்பியல், புள்ளியியல், கணினி அறிவியல், தகவல் தொடர்பியல் அல்லது எம்.சி.ஏ.ஆகிய கல்வித் தகுதியுடன் குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு www.airmenselection.cdac.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இந்த பணிகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 11-ந் தேதி வரை நடக்கிறது. பயிற்சி வகுப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை 0424-2275860 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கலெக்டர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X